
posted 21st June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இருவர் கைது
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் வந்திறங்கியதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ராமேஸ்வரம் மரைன் போலீசார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)