
posted 24th November 2021
சாவகச்சேரி நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
படுகாயம் அடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 36 வயது நபரே காயமடைந்தவராவார். தனிப்பட்ட பகைமையே வாள்வெட்டுக்கான காரணம் என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்தாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்