
posted 24th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
டெங்கு பரிசோதனை
திருகோணமலை மாவட்டத்தில் டெங்குத் தாக்கத்தின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு நுளம்பு பரிசோதனை நடவடிக்கைக்கள் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரனின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கிணங்க திருகோணமலை சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள எல்லாப் பிரதேசங்களிலும் டெங்கு நுளம்பு பரிசோதனை நடவடிக்கைக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைவாக, திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் நேற்று முன் தினம் காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பரிசோதனை நடவடிக்கைக்களின்போது, பல இடங்கள் பார்வையிடப்பட்டதுடன், டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், உயிரிழப்புகள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)