
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
செப். 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் - ஓகஸ்ட் 15இல் வேட்புமனு
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி மூலம் நேற்று (25) வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோரின் கட்டுப்பணத்தை ஏற்கும் பணி நேற்றைய தினமே ஆரம்பமானது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிமனையில் கட்டுப்பணத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் வரை வேட்பாளர்கள் செலுத்த முடியும்.
சனி, ஞாயிறு தினங்களை தவிர பணி நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை கட்டுப்பணத்தைக் கட்டமுடியும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50 ஆயிரம் ரூபாயையும், வேறு அரசியல் கட்சி அல்லது சுயேச்சை வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாயையும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.
தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடுவோர் தமது வேட்புமனுக்களை எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிமனையில் தாக்கல் செய்ய முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)