
posted 20th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சென்னையிலிருந்து 800 பேருடன் சொகுசு கப்பல் காங்கேசன் வந்தது
இந்தியாவின் சென்னையை சேர்ந்த சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
800இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை 6 மணிக்கு இந்தக் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் கடந்த புதன்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது. அங்கிருந்து, நேற்றுமுன்தினம் திருகோணமலை துறைமுகத்தை அடைந்ததுடன், நேற்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)