
posted 30th January 2022
பருத்தித்துறை போலீசாரால் பேதுறு முனை பிரதேசம் இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் இடம் பெற்றன.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காங்கேசன்துறை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் உதவி போலீஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்தமால் கொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பருத்தித்துறை போலீஸ் நிலைய போலீசார் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை குறித்த பகுதியில் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டன. இம் மரக்கன்றுகளை பருத்தித்துறை போலீஸ் நிலைய பிரதான போலீஸ் பரிசோதகர், பிரியந்த அமரசிங்க, உதவி போலீஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட உட்பட பலரும் நாட்டி வைத்தனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House