
posted 24th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சாய்ந்தமருது கொலை சம்பவம். ஐவருக்கு 14 நாட்கள் மறியல்
தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு திங்கட்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம். எஸ். எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பண வாதங்களை ஆராய்ந்த பின்னர் ஐவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அம்பாறை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிவேரியன் கிராமத்தில் 62 வயதுடய மீராசாஹிப் சின்னராசா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையிலேயே ஐவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)