சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து முல்லை சட்டத்தரணிகள் போராட்டம்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர் பகிர்வு

பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து முல்லை சட்டத்தரணிகள் போராட்டம்!

சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து முல்லை சட்டத்தரணிகள் போராட்டம்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் வெள்ளி (25) அன்று முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றில் ஆற்றிய உரையை கண்டித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த கண்டன போராட்டம் இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

  • இந்தப் போராட்டத்தில் கௌரவ நீதிபதிகளின் கடமையில் தலையிடாதே >*
  • சுயாதீனமான நீதித்துறையின் செயற்பாட்டை உறுதி செய்யுங்கள்
  • நீதித்துறையின் சுதந்திரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதே
  • பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யாதே
  • கௌரவ நீதிபதிகளின் கட்டளைகளுக்கு மதிப்பளி

போன்ற பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து முல்லை சட்டத்தரணிகள் போராட்டம்! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)