
posted 17th September 2021

கொடிகாமம் – வரணி, குடமியன் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், பவான் கிளைமோர் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் அதிசக்தி வாய்ந்தவை எனவும் சில நாட்களுக்கு முன்னர் வெடிபொருட்களை இந்த காட்டுபகுதிக்குள் கொண்டு வந்து மறைத்து வைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

எஸ் தில்லைநாதன்