
posted 13th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கொக்குத்தொடுவாய் புதைகுழி; 47 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்று (12) வெள்ளிக்கிழமை மேலும் 3 மனித எலும்புக்கூடு எச்சங்களும், துப்பாக்கி தோட்டாக்களும் அடையாளம் காணப்பட்டன. இதன்மூலம், அங்கு மீட்கப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மூன்றாவது கட்ட ஆய்வில் 7ஆவது நாளாகவும் நேற்று வெள்ளிக்கிழமையும் அகழ்வு தொடர்ந்தது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நடந்த இந்த ஆய்வில் நேற்றைய தினம் மேலதிகமாக 3 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், துப்பாக்கி தோட்டாக்களும் மீட்கப்பட்டன.
மூன்றாவது கட்ட ஆய்வில் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முன்னதாக இரு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)