
posted 9th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கின் சுற்றுலா மையம் பயிற்சித் திட்டம் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் கிழக்கிலங்கையில் வசிக்கின்ற சுற்றுலாத்துறையில் ஆர்வமிக்க இளைஞர் - யுவதிகளுக்கு "கிழக்கின் சுற்றுலா மையம்" பயிற்சித் திட்டமானது மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதியின் செயல்குழு தலைவரும் "கிழக்கின் சுற்றுலா மையம்" என்ற இந்த கருப்பொருளை ஜனாதிபதி மட்டத்துக்கு எடுத்துச்சென்ற வருமான சமூக ஆர்வலர் மோகன் கணபதிப்பிள்ளை பங்குபற்றியிருந்தார்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் 150இற்கு மேற்பட்ட இளைஞர் - யுவதிகள் பங்குபற்றி இருந்ததுடன் அவர்களுக்கான விரிவுரைகள், அனுபவமும் தேர்ச்சியும் மிக்க விரிவுரையாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.
கிழக்கின் சுற்றுலா மையம் செயல்திட்டமானது இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சித் திட்டமானது கிழக்கிலங்கையின் சுற்றுலா துறை முன்னேற்றம் மற்றும் அந்நியச் செலாவணியை அதிகரிக்க வழிவகுப்பதோடு அவர்களின் தொழில் மற்றும் வருமானத்தை அதிகரிக்க செய்வதையும் தொழில் அங்கத்துவத்தை வழங்குவதையும் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தப் பயிற்சி நெறி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவதுடன் கிழக்கின் சுற்றுலா மையத்தால் சுற்றுலா வழிகாட்டிக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டையும் வழங்கப்படவுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)