
posted 4th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காரைநகர் கடற்பரப்பில் 4 இந்திய மீனவர் கைது
காரைநகரை அண்மித்த பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய கடற்றொழிலாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை அறிவித்துள்ளது.
நேற்று (03) சனிக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்போது, அவர்களுக்கு சொந்தமான படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், குறித்த கடற்றொழிலாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். அத்துடன், மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)