
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காரைதீவு வைத்தியசாலைக்கு புதிய இணைப்பு தாழ்வாரம்
காரைதீவு வைத்தியசாலையில் சுமார் 4 மில்லியன் பெறுமதியான புதிய இணைப்பு தாழ்வாரம் (corridor) ஒன்றிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதன்படி பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலை காணியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் பழைய கட்டிடத்தொகுதியையும் இணைக்கும் வகையில் இது அமைக்கப்படவுள்ளது. இது நிர்மாணிக்கப்பட்ட பின்னர் புதிய கட்டிடம் வெளிநோயாளர் பிரிவாக பயன்படுத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வு காரைதீவு பிரதேச வைத்திய அதிகாரி திரு.ந. அருந்திரன் தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸடீன் பிரம அதிதியாக கலந்து கொண்டதுடன் வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள்,வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)