
posted 8th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காயன்குடா கண்ணகி வித்தியாலயம் கிழக்கில் மீண்டும் சம்பியனானது
கிழக்கு மாகாண மட்ட எல்லே போட்டியில் மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலயம் மீண்டும் சம்பியனாகி தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை கோணேஸ்வரா மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலயம் 17 : 3 எனும் வித்தியாசத்தில் மண்டூர் மகா வித்தியாலயத்தை தோற்கடித்து மீண்டும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலை தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் எல்லே போட்டியில் கிழக்கு மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த வருடம் நடைபெற்ற தேசிய ரீதியான போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)