காணி அற்றோர் மக்கள் இயக்கம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் எனக் கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது.

நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன், தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் பெருந்தொகை வாடகையைச் செலுத்த முடியாது தவித்து வருவதாகவும், அதனால் யாழ். மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை காணியற்ற தமக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக வெள்ளிக்கிழமை (24) கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து பேரணியாக வடமாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு சென்று செயலாளரிடம் மகஜரை கையளித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்தனர்.

அதேவேளை, அரச காணிகளை இராணுவத்தினர், கடற்படையினர், விமான படையினர் தமது படைமுகாம்களை அமைக்கத் தருமாறும் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதுடன், அக்காணிகளைச் சுவீகரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி அற்றோர் மக்கள் இயக்கம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More