
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காணாமல் ஆக்கப்பட்டோரின் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25) வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இப் போராட்டம் காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.
சர்வதேச விசாரணை தேவை, இழப்பீடுகள் வேண்டாம், எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற கோஷங்களையும் பதாதைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)