
posted 24th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று (23) செவ்வாய்க்கிழமை கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்துக்கு அருகே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் என்று இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)