
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ரூ. 2 இலட்சம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்கான பதிவு கிளிநொச்சியில் நேற்று (22) திங்கட்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 30 பேர் மாவட்ட செயலகத்தால் அழைக்கப்பட்டு இதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, இழப்பீட்டு பணியகத்தின் பணிப்பாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி நேற்று மாவட்ட செயலகத்துக்கு சமுகமளித்திருந்தார். அவர் கருத்து வெளியிடுகையில், “இழப்பீட்டு பணியகத்தால் பொருளாதார நெருக்கடியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 2 ஆயிரத்து 500 பேருக்கு இரண்டு இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளது. வெகுவிரைவில் ஏனையவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)