கல்முனை சுகாதார சேவை பணிப்பாளர் கௌரவிப்பு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கல்முனை சுகாதார சேவை பணிப்பாளர் கௌரவிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 - 29 வரை ஒரு வார காலம் கை கழுவுதல் விழிப்புணர்வு வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் நேற்று பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பு மருத்துவ அதிகாரி ஏ. எஸ். எம். பௌசாத், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ. எல். எம். லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ். ஜீவராஜா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதுரியா பானு ஆகியோர் இணைந்து பணிப்பாளரை பாராட்டி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வின்போது பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

கல்முனை சுகாதார சேவை பணிப்பாளர் கௌரவிப்பு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News