கட்டுமரத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் கடலில் மூழ்கி மரணம்

அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கட்டுமரத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் கடலில் மூழ்கி மரணம்

கட்டுமரத்தில் கரையோரமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் வீழ்ந்து மூழ்கியமையால் மரணத்தை தழுவிக் கொண்டார்.

இச்சம்பவம் ஞாயிறு (26) பிற்பகல் தலைமன்னார் பியரில் இடம்பெற்றுள்ளது..

இம் மரணம் தொடர்பாக மரண விசாரனையின் மூலம் தெரியவருவதாவது;

தலைமன்னார் பியரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான முகம்மது நஃபில்கான் (வயது 36 ) ஞாயிற்றுக் கிழமை (26) பிற்பகல் தனது சக மீனவ நண்பர் ஒருவருடன் கட்டுமரத்தில் தலைமன்னார் பியர் பாலத்தடியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சமயம் நஃபில்கான் கட்டுமரத்தில் பின்பக்கமும் இவருடன் சென்ற மற்றைய மீனவர் கட்டுமரத்தில் முன் பக்கமும் இருந்து கொண்டே மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சமயம் நஃபில்கான் கட்டுமரத்திலிருந்து திடீரென கடலுக்குள் கீழே விழுந்ததும் இவர் கடலுக்குள் இருந்து மேலே உடன் வராமையால் இவர்களுக்கு அருகாமையில் பாலத்தின் மேல் இச்சம்பவத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த கடற்படையினர் கடலுக்குள் குதித்து இவரை உடன் மீட்டெடுத்தனர். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

எனினும் இவரை உடனடியாக கடற்படையினர் தங்கள் வாகனத்தில் தலைமன்னார் வைத்திசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இவரின் உடல் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரண விசாரணையும், உடற்கூற்று பரிசோதனையும் இடம்பெற்றது.

மரண விசாரணையில் இறந்தவரின் மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.

இச்சாட்சியத்தில் இறந்தவர் நன்கு நீந்தத் தெரிந்தவர் எனவும், ஆனால் அடிக்கடி இவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும், இதனால் இவர் வலிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ. குமணகுமார் இம் மரண விசாரணையை மேற்கொண்டிருந்தார்.

இறந்தவரின் உடற்கூற்று பரிசோதனை முடிவுற்றதும் உடலை அவரின் உறவினரிடம் ஒப்படைக்கும்படி மரண விசாரணை அதிகாரி பொலிசாருக்கு கட்டளைப் பிறப்பித்திருந்தார்.

கட்டுமரத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் கடலில் மூழ்கி மரணம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More