
posted 2nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய திரு சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும். அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். உண்மையில், இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)