
posted 20th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இலங்கையரும் பயணித்த படகு சிசிலித்தீவு அருகே மூழ்கியது
இலங்கையர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த 160 அடி நீளமான சொகுசு படகு சிசிலி தீவு அருகே கடலில் மூழ்கியது. இதில், ஏழு பேரைக் காணவில்லை என்று இத்தாலி ஊடகங்கள் தெரிவித்தன.
நேற்று (19) திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் வீசிய சூறாவளியில் அகப்பட்டே படகு கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. சிசிலியில் பலேர்மோ அருகே சூறாவளி தாக்கியதிலேயே படகு மூழ்கியதாகத் தெரிய வந்தது.
இந்தப் படகில் இலங்கையர்கள் உட்பட நியூசிலாந்து, அயர்லாந்து நாட்டவர்களும், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இருவரும் பயணித்திருந்தனர். இவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக சிசிலி தீவுக்கு பயணித்திருந்தனர் என்று தெரிய வருகின்றது.
படகு மூழ்கியதை அடுத்து, கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒரு வயது குழந்தை உட்பட 15 பேரை மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தையும் தாயும் பலேர்மோவின் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். இருவரும் நலமுடன் இருக்கின்றனர் எனவும், தாய்க்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)