ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் பணியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

பட்டப்பின் படிப்பின் மூலம் அதிக ஆராய்ச்சியாளர்களை உருவாக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது பணியை ஆரம்பித்துள்ளதுடன் எதிர்காலத்தில் பல மைல் கற்களை அடையும் என்று உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் பட்டபின் படிப்பினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பல்கலைக்கழக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி சபீனா ஏம்.ஜி. ஹசன் மற்றும் பட்டபின் படிப்புகளுக்கான இணைத்தலைவர் பேராசிரியர் அப்துல் றவூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்;

இந்தியா உட்பட பல நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் ஆராய்ச்சியாளர்கள் குறைவாக உள்ளதை வெளிப்படுத்திய அவர், இலங்கையில் Master of Philosophy (Mphil) மற்றும் Doctor of Philosophy (PhD) போன்ற பட்டப் பின்படிப்பின் மூலம் அதிக ஆராய்ச்சியாளர்களை உருவாக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது பணியை ஆரம்பித்துள்ளதுடன் எதிர்காலத்தில் பல மைல்கற்களை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்

பல்கலைக்கழகத்தின் 25 வருட வரலாற்றில் முதன்முறையாக Master of Philosophy (Mphil) மற்றும் Doctor of Philosophy (PhD) படிப்புகளை ஆரம்பிப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதோடு இதற்கான விரிவுரையாளர்களின் பங்களிப்பிற்கு உபவேந்தர் நன்றி தெரிவித்தார்.

முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம் மற்றும் கலை மற்றும் கலாச்சார பீடங்கள் பல்கலைக்கழகத்தின் முன்னோடி பீடங்கள் என்றும் பல முயற்சிகளில் எப்போதும் முன்னோடியாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Master of Philosophy (Mphil) மற்றும் Doctor of Philosophy (PhD) புதிய விண்ணப்பதாரர்களுடன் தனது அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொண்டதோடு அவரது உரை முழுவதும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

Master of Philosophy (MPhil) மற்றும் Doctor of Philosophy (PhD) என்பது ஆராய்ச்சி வாழ்க்கையின் ஆரம்பம் என்று புதிய விண்ணப்பதாரர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். மேலும், வாழ்க்கையில் சாதிக்க இன்னும் நிறைய உள்ளன என்பதை வலியுறுத்தினார்.

உங்கள் பட்டப் பின்படிப்பின் ஆரம்பத்திலிருந்தே தொழில் கூட்டாண்மை மூலம் பயனடைவீர்கள், எதிர்கால வேலைகளை சமாளிப்பதற்கு தேவையான திறன்கள் மற்றும் அனுபவத்துடன் நீங்கள் பட்டம் பெறுவது உறுதி செய்வதற்கு எங்கள் படிப்புகள் கைகூடும் என்றும் தெரிவித்தார்.

பட்டப் பின்படிப்புகளில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. கற்பிக்கப்படும் படிப்புக்கள், ஆராய்ச்சி பட்டங்கள், மாற்றுப் படிப்புகள் மற்றும் தொழில்முறை தகுதிகள் உள்ளன. ஆகவே விண்ணப்பிக்கும் மற்றும் படிக்கும் படிப்புகள் வகை உங்கள் தொழில் நலன்களைப் பொறுத்ததெனவும் தெரிவித்தார்.

முதுகலைப் படிப்பின் பல நன்மைகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை அது ஒரு தனிப்பட்ட சாதனையாகும். மேலும் தற்போது அறிவைக் கட்டியெழுப்பவும், எனது அறிவுசார் ஆர்வங்களை விரிவுபடுத்தவும் ஒரு வழியாகும் என தெரிவித்தார்.

எதிர்கால தொழில்வாய்ப்புகளை மேம்படுத்தும் நீங்கள் நிச்சயமற்றதாக உணர்ந்தால், ஆசிரியர் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகள் எப்போதும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக இருக்கும்மெனவும், உங்கள் கனவுகளைத் துரத்தவும் கடினமாக உழைக்கவும் உங்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லையென்று உபவேந்தர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக இந்தியாவின் கேராளா கொச்சி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ நிறுவனத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி கே.எஸ். சந்திரசேகர் தொழில்நுட்பத்தினூடாக சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் இறுதியில் வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி சபீனா ஏம்.ஜி. ஹசனால் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

பீடாதிபதி கலாநிதி சபீனா ஏம்.ஜி. ஹசன் மற்றும் பட்டப்பின் படிப்புகளுக்கான இணைப்பாளர் பேராசிரியர் அப்துல் றவூப், பேராசிரியர் எம்.ஐ.எம். ஹிலால் ஆகியோருக்கான நினைவுச் சின்னங்களை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் வழங்கி வைத்தார்.

நிகழ்வின் நன்றியுரையினை பேராசிரியர் கலாநிதி. எஸ். குணாபாலன் நிகழ்த்தியதோடு, பீடாதிபதி, துறைத்தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உயரதிகாரிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் பணியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More