
posted 1st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு
சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பதில் மருத்துவ அத்தியட்சகருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் அர்ச்சனா தமக்கு அவதூறு ஏற்படுத்தினார், கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்பன உள்ளிட்ட ஐந்து முறைப்பாடுகள் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (31) புதன் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
இதன்போது, மருத்துவர் அர்ச்சனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, வழக்கின் இரு தரப்பினரும் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் என குறிப்பட்டதுடன் வழக்கை இணக்க சபைக்கு மாற்றுமாறு மன்றில் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
அதற்கு முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். அத்துடன், மருத்துவர் பொலிஸ் நிலையம் சென்று தான் குற்றஞ்சாட்டிய நபர்கள் தொடர்பிலான ஆதாரங்களை இதுவரையில் வழங்காமை தொடர்பிலும் மன்றில் சுட்டிக்காட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், மருத்துவர் அர்ச்சுனாவை பொலிஸ் நிலையம் சென்று வாக்குமூலம் ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் கட்டளையிட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)