
posted 5th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அம்பாறை துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மரணம்
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் அவரின் மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் பொலிஸ் அதிகாரி ஒருவர்.
அம்பாறை - நாமல் ஓயா - இக்கினியாகலை என்ற பகுதியில் நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இக்கினியாகலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரி அவரின் மனைவியையும் மாமியாரையும் தொலைபேசி மூலம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளார்.
சற்றுத்தூரத்தில் அவர்களுக்காகக் காத்திருந்த அந்த பொலிஸ் அதிகாரி அங்குவந்த இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூவரை சுட்டுக்கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு இறந்த பொலிஸ் அதிகாரி இக்கினியாகலைக்கு அருகில் மொனராகலை மாவட்டத்தின் கராண்டுகலை உப பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர் என்று தெரிய வந்தது.
இந்தக் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)