posted 1st February 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 27ஆம், 28ஆம் திகதிகளின் Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- Jana Foods Companyயில் வேலை செய்யும் இருவரின் கல்யாணத்திற்கு எல்லா ஒழுங்குகளையும் செய்த மீனாவும், தமிழும். அதே கோவிலில் ஒரு ஐதீகம் இருக்கிறதென்று ஜனாம்மா ஒரு முறையினைச் செயல்படுத்தினா.
- இதனை தவறுதலான கோணத்தில் சிந்தித்த சிபீ எடுத்த பிழையான முடிவினில் ஆட்டம் கண்ட தமிழும், ஜனாம்மாவும்.
- கல்யாணம் ஒழுங்காகவும், செவ்வனேயும் நடைபெற்றது.
- வீடு திரும்பிய ஜனாம்மாவிற்கும், தமிழுக்கும் காத்திருந்து அதிர்ச்சி. ஆடிப்போன குடும்பம்.
- சொத்திற்காக நெஞ்சினில் குரூரத்தினை வைத்துக் கொண்டிருப்பவர் மத்தியில் சிபீயினதும், தமிழினது வாழ்க்கை பிரகாசிக்குமா?
- ஜனாம்மாவிடம் தனக்கும் தமிழுக்கும் ஒத்து வராது என்றும், அவளுடன் வாழ தனக்குப் பிடிக்கவில்லை என்று சிபீ சொல்லிக் கொண்டிருந்ததை முழுவதாகக் கேட்ட முத்தம்மா.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 27 - 28.01.2026
தமிழ் விரும்பித்தான் இந்தக் கல்யாணத்தினைச் செய்திருந்தால் பரவாயில்லை. அவளே பிரிந்து போய் விடுவாள். ஆனால், இக் கல்யாணத்தினைச் செய்வித்தது ஜனாம்மாவல்லா. ஜனாம்மாவை எதிர்க்கவும் முடியாத நிலையினில் தமிழ். நித்தமும் வேண்டாம் என்று தமிழை ஒதுக்குகையில் தமிழ்தான் என்ன செய்வாள். சிபீ உண்மையாகத் தமிழை வெறுக்கின்றானா? அல்லது அவனது egoவால் தமிழைத் தவிர்க்கின்றானா?
ஆனால் ஒன்று, இப்போது தமிழுக்கு ஜனாம்மா நல்ல ஒரு புத்திமதி சொல்லி இருக்கின்றா. அதாவது, நின்று எதிர்த்துப் போராட வேண்டும். மாறாக, பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடக் கூடாது. இது தமிழின் மனதினில் ஆழமாகப் பதிந்திருக்கும். எனவே, இந்த சலசலப்பிற்கெல்லாம் தமிழ் இனி அஞ்சமாட்டாள்.
மீனாவோ மனம் திரும்பி தமிழில் உண்மையான நம்பிக்கையினையும், அன்பினையும் கொட்டத் தொடங்குகையில் சிபீயின் இந்த முடிவானது எவ்வளவு தாக்கத்தினை மீனாவிற்கு உண்டாக்குகின்றதோ என்பதனைக் கூட சிபீ சிந்திக்கவி்ல்லையே! என்ன மனநிலையோடே சிபீ இருக்கின்றான் என்று ஒருவருக்கும் விளங்கவில்லை. இப்படியான மனநிலை கொண்டவர் ஒரு நாளைக்கு யாரிடமும் சிக்குவார்கள். அதற்கும் தமிழ்தான் தேவைப்படுவாள்.
வெண்பாவின் குள்ளத்தனமும், தமிழுக்கும், ஜனாம்மாவிற்கும் எதிராக அவள் செய்யும் தில்லாலங்கடிகளெல்லாம் அவள் ஒருநாளைக்கு பிரகாஷி்ன் அறையினுள் வரும்போது பிரகாஷே கண்டு பிடிப்பார். இதனைத் தமிழுக்கும் சொல்லி தமிழை உசார் படுத்துவார் பிரகாஷ்.
தமிழ் சிபீ்க்கு கைபட எழுதி சட்டத்தரணி மூலமாகக் கொடுத்தனுப்பிய கடிதத்தினை ஆதாரமாக வைத்துத்தான் சிபீ இந்த விவாகரத்துக் கடிதத்தினை அனுப்பினானாக்கும். அனால், அதில், சொத்தையும், கொம்பனிப் பொறுப்பைப் பற்றித்தானே தமிழ் எழுதி இருந்தாளே ஒழிய, சிபீக்கும் தனக்குமான இந்த கல்யாண பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லையே! ஆனால், சிபீ அந்தக் கடிதத்தினை வேறுமாதிரியாக எழுதி எடுத்தானோ என்ற சந்தேகம் இங்கு தொக்கு நிற்கின்றது.
ஆனால், தமிழுக்கு இப்படியாக நித்தமும் சிபீ தமிழைத் திண்டு தண்ணி குடிப்பானாக இருந்தால், அவளுக்கும் ஒரு நாள், தனது இந்த வாழ்க்கையானது தனக்குத் தேவைதானா என்று சிந்திக்கவும் தோன்றத்தானே செய்யும். இது நடக்குமா?
ஆனால், சிபீயோ ஒன்றையும் சிந்தி்க்காமல், தனது சுயநலத்தினால் மற்றவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருக்கும் சிபீ மாதிரியா தமிழ், இல்லையே! தமிழோ, தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்காமல் மற்றவர்களைத்தான் தனக்கு முன்பாகச் சிந்திப்பாள். இதனால்தான், தமிழுக்கு அவளால் உடனே முடிவொன்றும் எடுக்கமுடியாமல் இருக்கின்றது.
தனக்குத் தமிழைப் பிடிக்காது என்று மீ்ண்டும் மீண்டும் ஜனாம்மாவின் முகத்திற்கு நேராகவே சொல்லி விட்டுச் சென்றான் சிபீ. அதனை முத்தம்மாவும் கேட்டுக் கலங்கிப் போனா. தமிழின் விஷயத்தில் சிபீ ஜனாம்மாவை எதிர்க்கத் தொடங்கி விட்டான். இப்போது தமிழின் வாழ்க்கைதான் கேள்விக் குறியாக இருக்கின்றது. அதுவும், ஜனாம்மாவால்தான் என்று ஜனாம்மாவிற்கு மனம் உறுத்தாமலா இருக்கும்.
ஜனாம்மாவும் எவ்வளவோ சிபீக்கு தமிழுடனான வாழ்க்கையினைப் பற்றிச் சொல்லியும் பார்த்தா. ஆனால், சிபீயோ தனக்கு தமிழுடனான வாழ்க்கை வேண்டாம் என்று சொல்லியே விட்டான். இதனைக் கேட்ட முத்தம்மா, கட்டாயமாக அம்முவிடம் சொல்லத்தான் செய்வா. இதனால், அங்கு தமிழின் குடும்பத்தில் ஏற்படப் போகும் பூகம்பத்தின் விளைவுகளை என்னென்று அவர்கள் தாங்கப் போகின்றார்களோ?
அதுமட்டுமல்லாமல், அந்த இளம் குடும்பத்தின் கல்யாணத்தில் கூட ஜனாம்மாவைத் தலை குனிய வைத்து விட்டானே சிபீ. அதுவும், ஜனாம்மாவின் கொம்பனியில் வேலை செய்பவர்களின் மத்தியில். இனி மற்றவர்களும் மதிப்பார்களா ஜனாம்மாவையும், அவவின் குடும்பத்தினையும்?
இனி, தமிழின் முடிவு என்னவாக இருக்கும்?
தமிழ் ஜனாம்மாவை விட்டுப் பிரியாமல் இருக்கலாம், ஆனால், சிபீயைப் பிரிந்து தனது குடும்பத்துடன் outdoors இல் வாழுவாளா? அல்லது வேறு வீட்டிற்குப் போய் விடுவாளா?
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!