posted 20th February 2026
இன்றைய Serial Review & Analysisஆனது 18ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதிகள் வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
ஜனாம்மா, தன் மகள் அம்முவால் காப்பாற்றப்பட்டா. அம்மு தன்னைக் காப்பாற்றுவா என்று தெரியாது ஜனாம்மாவிற்கு, ஆனால், அம்முவிற்குத் தெரியும் தன் அம்மாவைத் தான் காப்பாற்றப் போகின்றேன் என்றும், காப்பாற்றியும் விட்டா என்றும்.
இதன் பின்பு அம்மு அவசரப்பட்டதினால்தான், ஜனாம்மாவின் கோபம் அதிகரித்தது. ஜனாம்மா விபத்து நடந்த இடத்திலிருந்து ஆட்டோவில் வைத்தியசாலைக்குக் கொண்டு போனது, இரத்தம் கொடுத்தது, அதற்கான செலவினை அவவே பொறுத்துக் கொண்டது எல்லாம் அம்முவிற்கோ, கூடச் செய்துவிட்டா. ஆனால், ஜனாம்மா சொன்னது போல அம்முவின் விஷயத்தினை எடுத்துக் கொள்ள முடியாது.
Varisu - வாரிசு - 18 - 20.02.2026
தமிழுக்கு, தமிழின் மாமா, ஜனாம்மாவின் மகன், பிரகாஷ் சொன்ன பிரகாரம், அம்முவை ஜனாம்மாவின் தொழிலகத்தில் வேலைக்குச் சேர்க்கும்படி, அம்முவும் வேலைக்குச் சேர்க்கப்பட்டா. தொழிலகத்திற்குத் தேவைப்பட்டிருந்த மேற்பார்வையாளர் பதவிக்கு எல்லாத் தகுதிகளும் இருந்த படியாலும், எல்லாச் சோதனைகளிலும் அம்மு சித்தி அடைந்ததினாலும் அம்மு அந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளா.
அம்மு, தனது அத்தை, தங்களது தொழிலகத்தில் வேலை செய்வது, அதாவது, தனக்குக் கீழே வேலை செய்வது சிபீக்குப் பிடிக்கவில்லை. உயர்வு தாழ்வு என்ற பிரச்சினை இ்ல்லை சிபீக்கு. தான் அம்முவின் வீட்டின் மூத்த மருமகன், மாப்பிள்ளை என்பதனால், தகப்பன் இல்லாத குடும்பம் வேறு, அந்தக் குடும்பத்தின் மேலே சிபீக்கு தமிழைக் கல்யாணம் பண்ணும் முன்பிருந்தே அளவு கடந்த விருப்பம் இருப்பதனால்தான் சிபீக்கு இந்த மனக் குளப்பம்.
ஆனால், அம்முவிடம், சிபீ கேட்டுக் கொண்டது, உங்களுடைய வேலையினை மட்டும் பாருங்கள் என்பதும், ஏதாவது பிரச்சனை இருந்தால் தன்னிடம் கூறும்படியும் அம்முவுக்குக் கூறியதுதான். இப்போது சிலசமயம் சிபீ கூறியது பிரயோசனப்படலாம். அதாவது இப்போது தொழிற்சாலைக்குப் பொறுப்பாக இருப்பவ, வந்ததும் வராததுமாக, அம்முவை, யார் என்று தெரியாமல் packing sectionனுக்குப் போகச் சொன்னது சிபீக்கு மட்டும் தெரிந்தால், இவவின் கதை கந்தல்தான்.
தொழிற்சாலைக்கு ஒருசில இயந்திரங்களை இறக்குமதி செய்த சிபீ உடனே அந்தப் பகுதியில் வேலை பார்க்கும் தொழிலாளிகளை உடனடியாக வேலையினை விட்டு தூக்குகையில், தங்களது பிரச்சனைகளை அதிகாரத்திற்கு வெளிப்படுத்தும் முகமாக, தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்னால் நின்று போராட்டம் நடத்தினார்கள்.
வினோத்தின் சொல்லினைக் கேட்காமல் போராட்டம் சிபீயை எதிர்த்து நடைபெற்றது. சிபீயின் இந்த அவசர முடிவினால், சிபீயின் பெயரானது கொஞ்சம் கீழிறங்கியது. ஆனால், இன்று வேலைக்கு தொழிலாளியாகச் சேர்ந்தவன் தொழிலாளர்களின் நிலைமைகளை புட்டு புட்டு வைத்தான். ஆனால், இதனை விளங்காததுதான் சிபீயின் பிரச்சினையே.
அம்மு தனது வேலையினை முதலாம் நாளாகத் தொடங்கினா. அன்றே அந்த தொழிற்சாலையின் பொறுப்பதிகாரி அம்முவை குளிர்பானம் கொண்டு போய் ஜனாம்மாவைச் சந்திக்க வந்த மீனாவுக்கு, அதாவது, சின்ன முதலாளிக்கு, கொடுக்கும்படி பணித்தா. அம்முவின் நினைவோ சின்ன முதலாளி என்பது தனது மகள் தமிழ்தான் என்று மனதினில் விளங்கியவவாய், குளிர்பானத்தினை எடுத்துக் கொண்டு ஜனாம்மாவின் அறைக்குள் போனா அம்மு.
ஆனால், அம்முவுக்கோ ஜனாம்மா சொன்னதினை மறந்து விட்டா போலும். அதாவது, தன்னை, அம்மு ஒருகாலமும் தன் முகத்தில் முழிக்கக் கூடாதென்பதுதான். இதனை அம்மு மறந்துவிட்டு, முத்தம்மா சொன்னதினை மனதில் கொண்டாவோ என்னவோ தெரியவில்லை குளிர்பானத்தினை எடுத்துக் கொண்டு ஜனாம்மாவின் அறைக்குச் சொன்றா.
ஏன் அம்மு தமிழின் அறைக்குப் போகாமல் ஜனாம்மாவின் அறைக்குப் போனா? அத்துடன், அம்மு குளிர்பானத்தினை கொண்டு போவதற்குக் காரணம், அம்முவின் மேலதிகாரி சொன்னபடியினால்தான். போயாகத்தானே ஆக வேண்டும்.
இந்தக் குறுகிய காலத்தில், மூன்று பேர்கள் இங்கு அறிமுகமாகி உள்ளார்கள். ஒன்று, அம்மு, இரண்டாவது, தொழிற்சாலை பொறுப்பதிகாரி, மூன்றாவது, பிரபு. இதில், மூவரும் மூன்று இடங்களில் இருந்து வந்தவர்களாச்சே!
அம்முவினால் எந்தவிதமான பிரச்சினைகளும் எவருக்கும் வராது. ஏனென்றால், அம்முவின் குணம் வேறு, அமுதாவின் குணம் வேறு. ஆனால், பிரபுவும், தொழிற்சாலை பொறுப்பதிகாரியும் வேறவர்கள். பார்கத்தானே போகின்றோம்.
இவர்களை இங்கு அனுப்பியவர்கள் யாரு? எதற்காக இங்கு வேலைக்கு வந்துள்ளார்கள்? ஏனென்றால், முன் ஒருவன் அதுவும் குறிஞ்சியின் ஆள், கணேஷனின் உதவியில் வேலையில் சேர்க்கப்பட்டான். அவன்தான் தமிழையும், சிபீயையும் குளிர் அறையினுள் வைத்துப் பூட்டி விட்டுப் போனவன்.
பிரபுவின் துணிச்சலான குணத்தினைப் பார்த்ததும் பிரமித்துப் போன ஜனாம்மா. அத்துடன் தமிழும் சேர்ந்து. ஆனால், இதுவும் ஜனாம்மாவின் ஒரு weak pointராகத் தெரிகின்றது. அதனைப் பார்த்து பிரபு உள்ளே நுளைக்கப்பட்டானா?
சிபீக்கு இப்போது, அதாவது கேடீ சொன்ன பின்பு, தமிழின் மேலே அன்பு வந்தது போலத்தான் தோன்றுகின்றது. அதனை வெளிக் கொணரவிடாமல் தமிழ், சிபீயிடம் தன்னை லவ் பண்ணிறீங்கள்தானே என்று மீண்டும் மீண்டும் கேட்பது அவனின் ரோஷத்தினை சீண்டி விடுவது போலத் தோன்றுகின்றது. இதனால், சிபீயும் இல்லை என்ற பதிலையே திரும்பவும் சொல்லுகின்றான்.
உண்மையாகவே சிபீக்கு தமிழின் மேலே லவ் வந்துள்ளாதா? இல்லையா? நீங்களே சொல்லுங்கள்.
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!