posted 7th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
Varisu - வாரிசு - 05.06.2026
தமிழோ வீட்டினிலே எல்லா இடத்திற்கும் போய் வருவது வழக்கமாக இருந்ததும் ஒரு விதத்தில் நல்லதாகத் தெரிகின்றது. காரணம், களத்தனங்களை தமிழுக்கு பிடிக்கக் கூடிய சந்தர்ப்பங்களை இந்த நடவடிக்கையானது உருவாக்குகின்றது.
Outdoorsலிருந்து புகை வருவதை அவதானித்த தமிழ், முதலில் கணேஷன்தான் புகைபிடிப்பது என்பது அவளின் நினைவிற்கு வந்தது. ஆனால், அது அப்படியல்ல. கணேஷனுக்குப் பதிலாக புகைமண்டலத்தினை உருவாக்கியவர், வருங்கால மருமகன், பிரபுதான் புகையினை ஊதி விளையாடிக் கொண்டிருந்ததனை கண்டு கொண்டாள் தமிழ்.
பிரபுவும் புகையும் தலையங்கமானது வர்ஷியிடம் ஒப்புவிக்கப்பட்டது. தமிழும், வர்ஷியும் அறையினுள் கதைத்துக் கொண்டிருந்ததனை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரபு. இப்படி கள்ளத்தனங்களுக்குச் சொந்தக் காரர்கள் எப்பவும் அவதானமாக இருப்பார்கள். ஆனால் இவர்களும் ஒரு இடத்தில் தங்கள் பிழையினை நழுவ விடுவார்கள்.
இப்படியாக விட்டதுதான், outdoorsஇல் பிரபு புகை பிடித்தது. ஆனால், வர்ஷியோ பாவம், பிரபுவின் நடிப்பில் ஏமாந்து விட்டாள். எல்லோரையும் ஏமாற்றி உள்ளே நுழைந்தவனுக்கு வர்ஷி இவனுக்கு எந்த மாத்திரம்? ஆனால், தமிழுக்கு வர்ஷி உண்மையைத்தான் சொல்கின்றாள் என்று தெரியும். ஆதாவது, பிரபு சொன்னதினை நம்பிய வர்ஷி அதனையே தமிழிடம் சொன்கின்றாள் என்பதும் தமிழுக்குத் தெரியும்.
அதுமட்டுமல்லாமல், கடைத்தெருவில் பிரபுவுடன் ஒரு பெண் கதைத்துக் கொண்டு நிற்பதுடன், அவள் அழுதாள் பிரபுவிடம் ஏதோ சொல்லி. அவளுடனான சம்பாஷனை முடிவடைந்ததும், தமிழ் நேராகவே பிரபுவைச் சந்தித்தாள், அவனிடம் வினவினாள். பிரபுவோ தமிழுக்கு அவள் யார் என்பதனை மழுப்பி விட்டான். இதில், தமிழ் சந்தேகம் கொண்டாள். அவள் அழுததற்கும், பிரபு சொல்லிய காரணத்திற்கும் வெகு தூரமாக இருந்ததனை தமிழ் உணர்ந்தாள்.
எப்படித்தான் அமுதா மீனாவிடம் குளப்பங்களை உருவாக்குவதற்குக் கதைத்தாலும், இப்போது மீனாவின் நிலைமையானது முன்னைய மீனாவின் போக்கை விட மிகவும் வித்தியாசமாகவே இருந்ததனை பிராகஷும், ஜனாம்மாவும் கண்டுணர்ந்து கொண்டார்கள். பெருமிதமும் கொண்டார்கள், மீனாவைப் பார்த்து.
பிரபுவின் கள்ளத்தனம், குள்ளத்தனமான மனநிலை, ஜனாம்மாவைப் பழிவாங்கும் மனப்பான்மை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெட்டைக்கு வருவதை இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படியாக கெட்ட மனம் பிடித்தவன் இயற்கையாகவே கெட்டவன்தான்.
இதைப் போலவேதான், சம்யூத்தாவினதும், பிறேமினதும், அவனது பெற்றாரினதும் குள்ளத்தனமும், தமிழைக் கொல்லும் அளவிற்குத் துணிந்த இந்தக் கூட்டமானது இறுதியில் சம்யூத்தாவிற்கு சிபீ தாலி கட்டும் தருணத்தில் அயலியின் குழுவினரால் இவர்கள் அடையாளம் காணப்பட்டு, மண்டபத்தினை விட்டு கலைக்கப்பட்டதும் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்தானே.
அதேபோலத்தான், இப்போது அடுத்த குழு களத்தில் இறங்கியுள்ளது. அதுதான், பிரபுவின் குடும்பம். இவனின் குடும்பத்திற்கும் சம்யூத்தாவின் குழுவினருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?
அதே சமயம், பிரபுவின் அப்பா, தங்களை பிரபு சிறு வயதினில் இருக்கையிலே, விட்டு விட்டுச் சென்று விட்டார் என்றும், தனது தனி உழைப்பினிலேயும், தனது மேல் படிப்பினாலும் தான் முன்னுக்கு வந்தேன் என்று பிரபுவுன் அம்மா கூறியது, ஜனாம்மாவின் மனதினை உருக்கியது.
ஏனென்றால், பிரபுவின் அம்மாவின் வாழ்க்கையின் கதையும், தனதும் ஒத்துப் போயுள்ளதினால். ஆனால், பிரபுவின் அப்பாவிற்கும் இவர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றது என்பது ஊகிக்கக் கூடியதாக உள்ளது. இதனையும் தமிழ் கண்டு பிடிப்பாள்.
இதுமட்டுமல்லாமல், தமிழ் பிரபுவுடன் கதைத்த பெண் யாரென்றும் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடிப்பாள்.
இதனால், தமிழுக்கு ஆபத்துக்களும் வரலாம். ஆனால், இவர்களின் எல்லா சரித்திரத்தினையும் தமிழ் வெட்டைக்குக் கொண்டு வருவாள். அத்துடன், பிரபு தாலி கட்ட முனைகையிலே, தமிழ் கல்யாணத்தினை அந்தப் பெண்ணோடும், பொலிஸோடும் கல்யாண மண்டபத்திற்கு வந்து நிறுத்துவாள். என்ன நடந்ததென விபரிப்பாள்.
அத்துடன், மீனாவின் அக்கா முறையானவள் மீனாவை மரியாதையீனப் படுத்துகையில், தமிழ் கணேஷனையும், அமுதாவையும் அவவிடம் விட்டுக் கொடுக்கவில்லை. அதனைப்பார்த்து மீனா பரவசம் அடைந்தா.
இறுதியில் சேதுவுக்கும், வர்ஷிக்குமா கல்யாணம் நடைபெறும் என்பது எனது ஊகமாக இப்போது இருக்கின்றது? உங்கள் கருத்துத்தான் என்ன?
எமது Reel Review channel லினைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்? உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!