posted 25th June 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
வாரிசு தமிழ் சீரியலானது இன்று மட்டுக்கும் நடந்தேறியனவாக, கடத்தப்பட்ட சிபீ கண்டு பிடிக்கப்பட்டான். தமிழினதும், சேதுவுவினதும், கேடீயினதும் முயற்சிகளினாலும், பொலிஸின் பாதுகாப்பினாலும் இது நடைபெற்றது. ஆனால், பிரபுவும் இதில் சேர்ந்து கொண்டான். பிரபுவும் தொடர்ந்து நடிப்பதனை விட்ட பாடாக இல்லை. கெட்டவன் எப்பதான் திருந்துவான் என்பது இதிலிருந்து புலனாகின்றது. வர்ஷினியைத் தொடர்ந்து தன் வலையினுள் வீழ்த்துவதற்காக பிரபு தொடர்ச்சியான திட்டங்களின் மேல் திட்டங்களை அமூல் படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான்.
Varisu - வாரிசு - 24.06.2026
வீட்டிற்கு வந்தாள் வர்ஷி. வர்ஷியைக் காலையிலிருந்து காணவில்லை என்று வீடே கலங்கிப் போய் இருக்கையிலே, மிகவும் அலுத்துப் போய் வந்தாள். ஒரு முடிவுடன்தான் வந்துள்ளாள் என்று ஒருவரும் நினைக்கவில்லை. வர்ஷியை நன்காகப் பதப்படுத்தி அனுப்பி வைத்துள்ளான் பிரபு.
வீட்டிலுள்ள யாரையும் விட்டு வைக்கவில்லை, வர்ஷனி. இப்படித்தான் செய் என்று பிரபு வர்ஷிக்குப் பாடம் எடுக்கவுமில்லை. ஆனால், எப்படியெல்லாம் வர்ஷி கதைகும்படியான script ரினை detect பண்ணி அவள் மனதினில் எழுதி விட்டான், பிரபு.
வர்ஷி ஏன் இப்படி கெட்டவர்களைத் தேடித் தேடி காதலிக்கின்றாள் என்பதுதான் தெரியவில்லை. ஒருவாறாக முதல் காதலைக் கலைத்துவிட்டாள் தமிழ். இப்போது முன்னையவனை விட கேடு கெட்டவனைத் தேடிக் காதலிக்கின்றாள் வர்ஷி. தங்களது குடும்பத்தின் பரம எதிரி குறிஞ்சிதான் என்று தெரிந்த பின்பும், வர்ஷி காதலிக்கின்றாள், பிரபுவை என்றால், இவளுக்கு காதலின் மயக்கமா? அல்லது அனைவரையும் காவு கொள்ளும் முனைதலா?
வீட்டிலுள்ள ஒருவரையும் வர்ஷி விட்டபாடாக இல்லை. அனைவரையும் மரியாதையீனப் படுத்தினாள். தூக்கி வளர்த்த கைகளுக்கு கேவலமான பெயர்களைச் சூட்டினாள். இதிலே கோபப் பட வேண்டியவ, மீனா, ஆனால், கோபப்பட்டாள் தமிழ். வர்ஷின் கன்னம் பழுக்கும் படி அறைந்தாள் தமிழ். அதெல்லாம் வர்ஷிக்கு வலிக்கவில்லை, காதலின் வேகம் அவளுக்கு அரணாக இருந்தது. பிரபுவின் கணிப்பு சரியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வாழ்ந்தால் பிரபுவுடன்தான் வாழுவேன் என்று தன்னுயிரையும் மாய்க்கத் துணிந்தாள்.
அனைவரும் வீட்டினிலே கலங்கிப் போய் அமைதியின்றி இருந்தார்கள். ஆனால், இவளைக் கொல்லனும் போல இருக்கின்றது என்று ஒரு கணமும் ஒருவரும் சிந்திக்கவில்லை.
ஆனால், 50 வருடங்களுக்கு முன்பு அம்பலவாணரின் மகள் கனகவள்ளி, றாஜனைக் காதலிக்கின்றாள் என்று தெரிந்ததும், அம்பலவாணர் தனது மகளுக்கு விஷத்தினைக் கொடுத்து கொலை செய்தாரே! அப்படியாக ஒன்றும் நடந்திருமோ என்று பயம் இருக்கையிலே, வர்ஷி தனது ஒரு ஆயுதத்தினைப் பாவித்தாள். தூக்க மாத்திரை போட்டு தனது குடும்பத்தினையே பயமுறுத்தலானாள் வர்ஷி.
உணவொன்றும் உண்ண மாட்டேன் என்று அடம்பிடித்தாள், இப்போது தூக்க மாத்திரை, இனி Plan C என்னவாக இருக்கும்? இதெல்லாம், தனது குடும்பத்தினை வறட்டி எடுப்பதற்கு அவளுக்குள் ஊண்றப்பட்டிருக்கும் திட்டங்கள்தான்.
பிரகாஷ் தனது தங்கை அம்மு, அவர்களின் வீட்டு றைவரை காதலிக்கின்றாள் என்று தெரிந்ததும், அவர்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தாரே! ஆனால், இப்போது அவரின் மகள் விரும்பாத ஒருவனை, அதாவது, எதிரியின் மகனை விரும்புகின்றாள் என்றால், பிரகாஷ் இப்போது கல்யாணம் பண்ணி வைப்பாரா? இந்த விஷயத்தில், பிரகாஷ் தனது மகளிடம் ஏதும் கேட்ட முடியாத நிலையினில் இருக்கின்றார்.
இதனால், அம்முவைத் தலைமுழுகிய ஜனாம்மா இப்போது வர்ஷினாயையும் தலைமுழுகிவிடுவாவா?
வர்ஷினியைக் காப்பாற்றக் குடும்பமே வைத்தியசாலையிலே தவிக்கின்றது.
பிரபுவின் மயக்கத்திலா, அல்லது தூக்க மாத்திரை உண்டதினால் ஏற்பட்ட மயக்கமா வரிஷிக்கு?
அம்மா என்று கூப்பிடாமல், நேற்று வந்த பிரபுவின் பெயரினை மயக்கத்திலும் அழைத்துக் கொண்டிருக்கும் வர்ஷினி.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!