posted 11th February 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
தமிழைப் புதைகுழியினுள் மனச்சாட்சி இல்லாமல் தள்ளிவிட்டு ஓடோடோடிச் சென்றாள் வெண்பா. இதற்குக் காரணம் காய்மகாரம். ஒரு பெண்ணின் வாழ்க்கையினைக் கெடுக்க வேண்டுமென்று திடசங்கர்ப்பம் ஒரு சில பெண்களால்தான் போட முடியும். அதற்காக இவர்கள் வாழ்க்கையின் எந்த எல்லைக்கும் போவார்கள், வெண்பா, சம்யூத்தா போன்றவர்கள்.
புதைகுழியினுள் அகப்பட்ட தமிழ் தத்தளித்துக் கொண்டு சிபீயைத்தான் கூப்பிட்டாள். அந்தக் குழியானது கொஞ்சம் கொஞ்சமாக தமிழை உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்பவும், மீண்டும் சொல்லுகின்றேன், இந்தக் காட்டினை ஆண்டு கொண்டிருப்பது அங்கே வீற்றிருக்கும் தெய்வம்தான். இதனைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்வார்கள். சிபீயையும், தமிழையும் இந்த அடர்ந்த காட்டினுள் அனுப்பிய தெய்வத்திற்குத் தெரியாதா இவர்களை ஒருவித சேதாரமும் இல்லாமல் காப்பாற்றிக் கொண்டு வருவதற்கு.
Varisu - வாரிசு - 09.02.2026
தன் மூச்சினைப் பிடித்துக் கொண்டு சிபீயைக் கூப்பிட்டாள் தமிழ். சிபீயை அவளுக்கும் தெரியாமல் வேறுதிசைக்கு திருப்பிக் கொண்டு நின்றாள் சம்யூத்தா. ஆனால், ஏதோ தெரியவில்லை இ்ப்போதெல்லாம், சிபீக்கு சம்யூத்தா அவனைப் பின் தொடர்வதனைக் கூட, ஏன் அவன் பக்கம் நிற்பதனைக் கூட விரும்புகிறான் இல்லை. ஏன்? தமிழின் மேலே சிபீ்க்கு லவ் வருகின்றதோ? அதுவும் தெரியவில்லை. ஆனால், எப்பவும் சிபீ தமிழிடம் தனக்குக் காதல் உன்னில் இல்லை என்றுதானே கூறுகின்றான்.
தமிழையும், சிபீயையும் தவிர, வேறு எத்தனை பேர் இந்த காட்டுத் தேனையும், கொண்டைப் பூவையும் தேடிப் போனாலும் தெய்வம் அவர்களின் கண்களில் காட்டி விடுமா? இது ஒருகாலும் நடக்காது. ஏனென்றால், அதற்கு தெய்வம் தெரிவு செய்ததே சிபீயையும், தமிழையும் மட்டும்தான்.
பிறேமும், சம்யூத்தாவும் காட்டினுள் போகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், இந்த அடர்ந்த காட்டினுள் வெண்பா தனிமையாகப் போகின்றாள் என்பதனை கணேஷனும், அமுதாவும் தடுக்கவுமி்ல்லை. வேறு ஒருவரும் அதற்கு ஆட்சேபனை செய்யவுமில்லை, வெண்பாவைத் தேடவுமில்லை.
இரவாக ஆக ஜனாம்மாவி்ற்கும், மீனாவின் குடும்பத்தவருக்கும் தமிழைப் பற்றியும், சிபீயைப் பற்றியும் காணவில்லை என்ற, ஏக்கமும் அவர்களை மிஞ்சியது. பயப்படத் தொடங்கி விட்டார்கள். ஆனால், கணேஷனோ அல்லது அமுதாவோ எந்தவிதமான கவலையும் இ்ல்லாமல் தமிழ் தொலைந்து போனால் காணும் என்று சிந்தனை மட்டும்தான் இருந்து கொண்டிருந்தது அவர்களுக்கு. தங்களுக்கும் ஒரு மகள் இருக்கின்றாள் என்ற எண்ணம் ஒரு துளியும் அவர்களுக்கோ இல்லை.
சிபீயையும், தமிழையும் தேடித்தரும் படி ஜனாம்மா பொலிஸின் உதவியை நாடினா. பொலிஸ் குளாம் காட்டினுள் இறங்கியது. இதுமட்டுமல்லாமல், சேதுவும், கேடீயும், தமிழையும், சிபீயையும் தேடத் தொடங்கினார்கள். அனைவரும் இரவு பூராகவும் அலைந்தார்கள்.
புதைகுழியினுள் அகப்பட்ட தமிழி்ன் குரல் சிபீக்குக் கேட்டது. கேட்க வைக்கப்பட்டது. இது தெய்வத்தின் ஆட்டம். ஓடிச் சென்றான் சிபீ தமிழைத் தேடி. சிபீ ஓடிய ஓட்டமும், சிபீயின் பதற்றமும் அவனின் துடிப்பில் தெரிந்தது மட்டுமல்லாமல், தெய்வ நம்பிக்கை இல்லாத சிபீக்கு தெய்வ நம்பிக்கை அரும்பியது. புதைகுழியினையினுள் தமிழ் தத்தளிப்பதனைக் கண்டு சிபீ பயந்தே விட்டான்.
தனது உயிரையும் விட மேலாக தமிழை நினைத்தவனாய் எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற அந்த சமயம் அவன் மனதினில் தோன்றிய அந்தத் துணிவினில் புதைகுழியினுள் இறங்கினான். தமிழை மீட்டெடுத்தான். ஆனால், தமிழோ மூச்சுப் பேச்சின்றிக் கிடந்தாள். தமிழின் நிலைமையினைப் பார்த்து சிபீ துடிதுடுத்துப் போனான்.
அப்போது தொடங்கினான் கடவுளை, அந்தத் தெய்வத்தினை நம்பினான். தெய்வத்தினையே சோதித்துப் பார்த்தான் சிபீ. நீ உண்மையான தெய்வமென்றால், இப்போ நான் உன்னை நம்புகின்றேன் தமிழைக் காப்பாற்று என்று. இந்தச் சொல்லு தெய்வத்திற்குக் காணும். உடனே, அந்தக் கணமே மூச்சினை இழுத்தாள் தமிழ்.
சிபீயின் துடிப்பை தமிழ் உணர்ந்தாள். ஆனால், குளிரின் அகோரத்தில் தமிழோ நடுங்கினாள். அத்துடன் அவளின் உடையும் முழுவதுமாக ஈரமாக இருந்தது. வீசிய காட்டுக் காற்றின் இதமோ தமிழுக்குக் குளிரினைக் கொடுத்து நடுங்க வைத்தது. இதனால், சிபீ தனது ஜக்கற்றினைக் கொடுத்து கொஞ்சம் குளிரின் தாக்கத்திலிருந்து தமிழைக் காப்பாற்றினான்.
ஆனால், சிவ பட்டினியாக இருந்த தமிழுக்குப் பசி தொடங்கியது. அவளோ சாதாரணமாக பசி தாங்க மாட்டாள். சிபீயைத்தான் முறைத்துப் பார்த்து முணுமுணுத்தாள் தமிழ், பசியின் கொடுமையில். சிபீயும் அங்கி்ங்குமாக அலைந்து ஒரு சில கிழங்கு வகைகளையும், சோளப் பொத்தி ஒன்றையும் கொண்டு வந்தான். குளிருக்காக மூட்டிய நெருப்பினில் அவற்றினை வாட்டினான். பசிக் கொடுமையினால் தமிழ் நன்றாக உண்டாள்.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!