posted 8th February 2026
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
மலைவாழ் ஜனங்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாம்மாவின் குடும்பம் அவர்களின் தெய்வத்திற்குரிய விழாவிற்கு சமூகம் அளித்தார்கள். ஜனாம்மாவை அம் மலைவாழ் மக்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள். ஏனென்றால், ஜனாம்மா அவர்களின் வாழ்வாரத்தினைக் காப்பாற்றிக் கொடுத்தமைக்காக அவர்கள் காட்டும் நன்றிக் கடனாக. இந்த பெருந்தன்மையினைக் கொச்சப்படுத்தினான் கணேஷன்.
தன் மகள் வெண்பாவிற்கு கணேஷன் கொடுத்த விளக்கத்திலிருந்து இது தெரிகின்றது கணேஷனின் மனமும் கேவலமானதென்றும், அவனின் மகள் வெண்பாவையும் தனக்கேற்றது போன்று ஆயத்தப்படுத்துவதனையும்.
சாமியாடி மூலஸ்தானத்திலிருந்து நேரடியாக சிபீயிடம் இறங்கி வந்ததனை மலையக மக்கள் ஒரு தெய்வ அருள் சிபீயிடம் உள்ளதென்று மரியாதையினைச் செய்கையில் அதனைக் கேவலமாக விளங்கிக் கொண்ட கணேஷன் குடும்பம். அத்துடன், இந்த மாதிரியான தெய்வத்தின் செயல்களை விளங்கிக் கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கும் சிபீ. இதற்குக் காரணம், சிபீ சின்ன வயசினிலே பெரியவர்களின் கட்டுக் கோப்பினில் வளராததுதான். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது கணேஷனே.
Varisu - வாரிசு - 07.02.2026
ஆனால், சிறு வயதினில் உறவுகளின் அணைப்பின்றி தன்னிஷ்டத்திற்கு வெளிநாட்டினிலே வாழ்ந்தவன் சிபீ. அவனுக்குரிய சூழல் மிகவும் வித்தியாசமான நினைவுகளை அவன் மனதினில் ஆழப் பதித்து விட்டது. அதற்காக, வெளிநாட்டில் உள்ளவர்கள் எவரும் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சிபீயை வைத்து பிழையாக எடை போட்டு விடக் கூடாதல்லவா? ஆனால், சிபீக்கோ தெய்வ நம்பிக்கையானது அவனை வளர்த்தவர்களால் ஊட்டப்படவில்லை என்றுதான் கூற வேண்டும்.
சாமியாடி வழமையாக அந்த மலைவாழ் மக்களில் ஒருவரைத்தான் கேட்டு நிற்கும். ஆனால், இந்த முறைதான் வெளியாள் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. அதாவது உங்களைத் தெரிந்தெடுத்திருக்கின்றது. இதற்கு ஒரு கொடுப்பனவு வேண்டும் என்று அவர்கள் சிபீக்கு விளக்கம் சொன்னார்கள். ஆனால், அந்த விளக்கமும் சிபீக்கோ விளங்கவில்லை. ஆனால், தமிழுக்கு விளங்கி விட்டது. ஏனென்றால் தமிழுக்கு இந்த முறையான வழிபாட்டு முறைகளினை அவளின் அப்பா சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.
அதாவது, நிலத்தில் வாழும் தெய்வம் என்ன செய்யும்? மலையில் வாழும் தெய்வம் என்ன செய்யும்? ஆனால், இரு இடங்களில் வாழும் தெய்வங்கள் மக்களைக் காக்கும் என்பதுதான் சாராம்சமே.
சிபீயின் விளக்கமின்மையானது அவனைப் புரியவிடாமல் பண்ணி இருக்கையிலே, தமிழ் சிபீயைக் கூட்டிக் கொண்டு காட்டிற்குள் போனாள், கொண்டைப் பூவையும், மலைத்தேனையும் எடுப்பதற்காக. இவர்களுக்குத் துணையாக கேடீயும், சேதுவும் சேர்க்கப்பட்டார்கள்.
ஆனால், பிறேமுக்கும், சம்யூத்தாவுக்கும், வெண்பாவிற்கும் இவற்றினை தாங்கள்தான் எடுக்க வேண்டும் என்று இறுமாப்பு கொண்டவர்களாய், பொறாமையும் பட்டார்கள். வெண்பா இந்த அடர்ந்த காட்டினுள் தனிமையிலே சென்றாள். ஆனால், சம்யூத்தாவோ தனது அண்ணன் பிறேமுடன் சென்றாள். ஆனால், இவர்களுக்கோ தெய்வத்தின் எண்ணத்தினை விளங்கிக் கொள்ளாமல் தாங்கள் தமிழின் மேலே வைத்த காய்மகாரத்தினால் இந்த அடர்ந்த காட்டினுள் கால் வைத்துள்ளார்கள். இவர்கள் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை, இந்தக் காடானது இந்த தெய்வத்தின் கட்டுப்பாட்டினுள் உள்ள காடு என்று.
தமிழ் தன்னுடன் வருவதனை சிபீ விரும்பாததினால் தமிழும், சிபீயும் பிரிந்து சென்று கொண்டைப் பூவையும், மலைத் தேனையும் எடுப்பதற்காகச் சென்றார்கள்.
தமிழ் தனிமையில் தேடுகையில், தமிழில் ஆத்திரம் கொண்டுள்ள வெண்பா தமிழை ஒரு பாழும் குளியினுள் தள்ளி விட்டாள். இதனுள் விழுந்த தமிழ் செத்துப் போகட்டும் என்பதுதான் வெண்பாவின் நோக்கமே. தமிழ் செத்தால் தான் சிபீயை மணம் முடிக்கலாம் என்ற பேராசைதான். ஆனால், தன்னைத் தள்ளி விட்டது வெண்பா என்று தமிழுக்குத் தெரியாது. ஆனால், இதனை தெய்வம் காட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நினைக்கத் தோன்றுகின்றது.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel Analysisஇனை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisஇனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!