posted 16th January 2026
இன்றைய Serial Review & Analysis ஆனது 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையிலான Serial Review & Analysisகளை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
- Boomi (பூமி)யைத் தனது conference ற்குக் கூட்டிச் சென்ற Gagan அங்கு வந்திருந்த ஒருவரினால் Boomi (பூமி)யை ஒழுக்கமின்மையாக behave பண்ணியதைக் கண்டதனால் கோபமடைந்த Gagan அவனை அடித்து விட்டு அவனுடனான contractரினை இரத்துச் செய்தான்.
- ஒருவரைக் காதலிப்பது என்றால், அந்தக் காதலில் உயிர் இருந்து துடித்துக் கொண்டிருக்குமானால், என்ன நடந்தாலும் அதற்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு பாடத்தினை Boomiயின் நண்பியாக நடிக்கும Boomi, Gaganக்குக் கற்பித்தாள். அதிர்ந்து போயிருந்த Gagan.
- நட்சத்திரா, தாய் ஆபூர்வாவுடன் Gaganனின் கொம்பனிக்கு வந்து தனக்கு கல்யாணம் கேட்டு நிட்சயமாக்கும்படி வற்புறுத்தியதால் அபூர்வாவும் வரவேண்டிய சூழ்நிலையில் சிக்கினா.
- Boomiயினதும், நட்சத்திராவினதும் Gaganனுக்கான சண்டை பலத்ததினால், வீட்டை விட்டு ஓடிய ஷாரதா.
சலங்கை ஒலி - Salangai Oli - 07 - 10 .01 . 2026
- Binthuதுவின் வரதட்சனைப் பணத்தினைக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் அபூர்வா, இறுதியில், அந்தப் பணத்தினை கிறிஷ்ணபிரஷாத்தான் களவாடி விட்டான் என்று முடிச்சுப் போட்டாள் அபூர்வா. அதனை ஷரத்சந்திராவும் நம்பினார்.
- Binthuவைக் கஷ்டப்படுத்திய மாமனும், மாமியாரும் தங்களுக்கு வரவேண்டிய வரதட்சனைப் பணத்தினை Gaganனிடமிருந்து conditionனுடன் பெற்றுக் கொண்டதினால் Binthu இப்போது நன்மதிப்போடு வாழுகின்றாள்.
- திருடன் பட்டத்துடன் வெளியேறிய கிறிஷ்ணபிரஷாத் pupபினிலே போய் குடித்ததினால் ஏற்பட்ட பிரச்சினையில் கை கொடுத்தான் Gagan.
- குடி போதையுடன் வீட்டிற்கு வந்த கிறிஷ்ணபிரஷாத், ஷோபச் சந்திரா கொலை செய்யப்பட்டதினை எல்லார் முன்னிலையிலும் சொன்னார்.
- இந்துவிற்கு தனது அண்ணன்தான் தனக்குரிய வரதட்சனைப் பணத்தினை தனது மாமனாரிடமும், அத்தையிடமும் கொடுத்ததினை அறிந்து கொண்டவளாய் மனம் திரும்பின இந்து.
- எதையும் எதிர் பார்க்காமலும் அந்த உதவிக்கு ஈடாக எதனையும் எதிர் பார்க்காதவன்தான் தனது Gagan என்று பெருமையுடன் கட்டியணைத்தாள் Boomi.
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் Serial Review and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
இப்படித்தான் வருவதென்றால் தனது conferenceற்கு வர வேண்டும் என்று, அதற்காக Boomiக்காக தான் வாங்கிய smart dress உடன் அழைத்துச் சென்றதினால், Boomiயை misbehave பண்ணியவனை Gagan அடித்துத் தள்ளி விட்டு அவனது contractரினைக் இரத்துச் செய்ததுமல்லாமல், Boomiயை இழுத்துக் கொண்டு வந்து விட்டான் Gagan.
இது ஏன் என்று அவனுக்குத் தெரியும். அதுதான் அந்தளவிற்குப் Boomiயை காதலிக்கின்றான் Gagan என்பதனால்தான். ஆனால், அவனுக்கு Boomiயும் காதலிக்கின்றாள் என்றதினால்தான் Boomiக்கு Gaganனின் அம்மா ஷாரதா வாங்கிய Necklaceஇனைப் போட்டு தங்களது வீட்டிற்குக் கூட்டிவரக் குடும்பமாகச் சென்ற Gaganனின் குடும்பத்தினையே தூக்கி எறிந்து கலைத்து விட்டாள் Boomi.
இது ஏன் நடந்தது? என்று இன்னமும் Gaganக்கும் தெரியவில்லை. ஆனால், ஷாரதாவிற்குத் தெரியும், அதுவும், அவவுடைய கணவன் கிறிஷ்ணபிரஷாத்தின் மூலமாக. அதுவும், Boomi, Gaganஐ காதலிக்கின்றாள் என்பதுதானே ஒழிய, Boomiதான் ஷரத்சந்திராவினதும், ஷோபச் சந்திராவிற்கும் பிறந்த மகள் என்பதும், Boomiப் பொறுத்த மட்டில் Gaganனும் வேண்டும், தனது தகப்பன் ஷரத்சந்திராவும் வேண்டும், எல்லாரும் ஒன்றாக, சந்தோஷமாகச் சீவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் Boomi அவ்வாறு அன்று நடந்து கொண்டாள் என்பது ஷாரதாவிற்குத் தெரியாது.
தனது தங்கை Binthuவைக் கஷ்டப்படுத்திய மாமனாரையும், மாமியாரையும் கண்ட Gagan, மனதினுள்ளே கஷ்டப்பட்டான். அதனால், அதற்குரிய காரணமான வரதட்சனைப் பணத்தினை தனது தாய் ஷாரதாவிடம் கேட்டும், அவவின் விருப்பத்துடனே அதனை அவர்களிடம் நிபந்தனைகளுடன் கொடுத்தான் Gagan. இதனைத் தெரிந்து கொண்ட BInthu மிகவும் கவலைப்பட்டாள். தான் எவ்வாறெல்லாம் தனது அண்ணனைக் கஷ்டப்படுத்தியதும், மரியாதையீனமாகப் பேசியதையும் நினைத்தாள், மனம் நொந்தாள். ஓடி வந்து Gagan அண்ணனிடம் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டாள்.
இவ்வாறு நல்ல மனத்துடன் இருப்பவன்தான் என்னைக் காதலிக்கின்றான் என்று பெருமையுடன் இருக்கையிலே, Gaganனது கொம்பனியிலே வேலை செய்யும் ஒரு கஷ்டப்பட்ட ஊழியருக்கு பணம் உதவியாகக் கொடுத்ததினைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்தாள் Boomi. ஓடிச் சென்று கட்டியணைத்தாள் Gaganனை. ஆனால், Gaganனின் வார்த்தையினைக் கேட்டு மனமுடைந்தவளாய் Gaganனின் officeஇனை விட்டு வெளியேறினாள் Boomi.
தன்னைத் திருடன் என்று பெயர் எல்லார் முன்னிலையிலும் சூட்டப்பட்ட கிறிஷ்ணபிரஷத் வீட்டிற்கு நிறை குடி போதையுடன் நடுநிசியில் வந்த போது, ஷரத்சந்திராவிடமே கேள்வியினைத் தொடுத்தார். உங்கள் தேவதை, ஷோபச் சந்திரா, மின்னொழுக்கால் சாகவில்லை, கொலை செய்தார்கள். இதனை கொஞ்சமும் நீங்கள் சந்தேகப்படவில்லையா? யோசிக்கவில்லையா? என்பதுதான் கிறிஷ்ணபிரஷாத்தின் கேள்வியாக இருந்தது.
பணத்தினைத் திருடிவிட்டு அதில் இருந்து தப்புவதற்காக குடுத்து விட்டு வந்த குடிகாரனாக உளறிக் கொண்டிருக்கின்றான் கிறிஷ்ணபிரஷாத் என்று கதையினை திருப்பி விட்டாள் அபூர்வா. அதனை நம்பித் தொலைத்தார் ஷரத்சந்திரா. எதுவும் அபூர்வாவைப் பற்றி ஷரத்சந்திராவிடம் சொல்லவே முடியாது. அந்தளவிற்று அபூர்வாவின் நடிப்பு ஷரத்சந்திராவிடமே.
ஆனால், இதில் ஒரு சந்தேகம் இப்போது கிழந்துள்ளது குடும்பத்தினருக்கிடையில். ஷோபச் சந்திரா தவறுதலாக இறந்தாவா? கொலை செய்யப்பட்டாவா? இதில் என்ன சந்தேகம் என்றால், கிறிஷ்ணபிரஷாத் என்னதான் சொன்னாலும் ஷோபச் சந்திரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதன் பக்கமே சாய்கின்றது. ஏனென்றால், கிறிஷ்ணபிரஷாத் உண்மை, நேர்மை, சத்தியம் எல்லாவற்றிற்கும் கட்டுப்பட்ட ஒரு திறமான மனிதன் என்று எல்லாருக்கும் தெரியும்.
ஷோபச்சந்திராவின் சாவின் உண்மை தெரிந்தவர்கள் கிறிஷ்ணபிரஷாத்தும், Boomiயும்தான். துர்அதிஷ்டவசமாக, Boomiயிடம் இருந்த உண்மைகளை எல்லாம் அழித்துவிட்டாள் அபூர்வா. ஆபூர்வாவே ஒரு திட்டமிட்டு மற்றவர்களை வைத்து எல்லாக் குற்றங்களையும் கட்சிதமாகச் செய்து கொண்டிருப்பவளின் முன்னால், கையடக்கத் தொலைபேசியினை ஆதாரம் இதில்தான் இருக்கின்றதென்று காட்டிக் கொண்டு திரிந்தால், அபூர்வா விட்டு விடுவாளா? எல்லா சாட்சிகளையும் திட்டம் போட்டு அழித்து விட்டாள்.
ஓரளவு நெருங்கிக் கொண்டிருக்கின்றது அபூர்வாவின் கொடூரமான உண்மைகள். அவைகள் எதுவும், அடங்கி அழிந்து போய் விடாது. உயிருடன் உண்மைகள் தாக்கப்பட்டுள்ளன. உண்மைகள் எப்பவும் அழிக்கப்படமாட்டாதவையே.
நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் எமது Reel Review channel லினைப் பற்றி. உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களை commentரினில் சொல்லுங்கள்.
எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது Reel Review channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள். அத்துடன் like பண்ணி, Hype பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel Analysisனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!