
posted 3rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
மூடப்படும் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை
காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் உள்ள புராதன நூதனசாலை சில தினங்களுக்கு மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு திருத்த வேலைக்காக நூதனசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி புராதன நூதனசாலை தற்போது உரிய பராமரிப்பின்றி காணப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு அன்றாடம் நாடு பூராகவும் பெரும் எண்ணிக்கையிலான உள்ளுர் மற்றும் வெளியூர் மக்கள் வருகின்றனர்.
இந்த பிரமாண்டமான நூதனசாலை 90 வீத முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே அமைகிறது.
இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, வணக்க வழிபாடு, அரசியல் உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
பராக்கிரமபாகு மன்னரின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்களின் உருவங்களும் பதிவாக வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், வியாபார முறைகள், புராதன பள்ளிவாயல்கள், முதலாவது 'வுளு' செய்த இடம் உட்பட பல நூறு முஸ்லிம் கலாசாரம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.
இந்நூதனசாலையின் அறிவித்தல் பலகைகள் சேதமடைந்து காணப்படுவதுடன் பார்வையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்ற எந்தவொரு வழிகாட்டலும் இன்றி உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சில காட்சி அறைகளில் துவாரங்க காணப்படுவதுடன் சில பொருட்கள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
தற்போது காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பில் உள்ள மேற்படி நூதனசாலை சில தினங்களுக்கு மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 04ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு திருத்த வேலைக்காக நூதனசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)