
posted 19th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
திருகோணமலையில் வைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை அவசியம் என பாராளுமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் (19) காலை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
சக பாராளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி உயிர் தப்பியுள்ளதோடு, திருகோணமலையில் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில் இது தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)