
posted 8th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் பாடசாலையின் குடிதண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு நடவடிக்கையொன்றை எடுத்துத்தெருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைவாக ஐ.எஸ்.ஆர்.சி நிறுவனத்தின் அனுசரணையுடன் இத்திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக்கினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் முளவ்பர், பழைய மாணவர் சங்ககத்தின் செயலாளர் சனான் ஆசிரியர், ஐ.எஸ். ஆர்.சி பிரதிநிதி லபீப் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)