
posted 7th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கல்முனை நகர லயன்ஸ் கழகம் இலவச கருத்தரங்கு
தொழில் முனைவோர் மற்றும் உயர்கல்விக்காகக் காத்திருப்போருக்கான இலவச கருத்தரங்கு ஒன்றை கல்முனை நகர லயன்ஸ் கழகம் நடத்த விருக்கின்றது.
“நாளைய தொடுவானத்திற்கு வழிசெலுத்துதல்” எனும் தலைப்பிலான இந்த இலவச கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காரைதீவு கலாச்சார மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தலைவர் லயன். எந்திரி. எம். சுதர்சன் தலைமையில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கில், சாதனையாளர்களான கராத்தே வெற்றிவீரர் பாலுராஜ், இளம் கண்டுபிடிப்பாளர் (விஞ்ஞானி) வினோஜ் குமார், சாதனைபடைத்த நீச்சல் வீரரும், ஜனாதிபதி விருது பெற்ற சாரணருமான செல்வன். மதுஷன், வளர்ந்து வரும் தொழில் முயற்சியாண்மையாளரும், விருது பெற்ற வருமான திருமதி. ஜேசுமணி சிவஜோதி ஆகிய சாதனையாளர்கள் தாம் கடந்துவந்த பாதை, மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வர்.
மேலும், கருத்தரங்கில் பிரதான வளவாளர்களாக ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழக நூலகர் (பதில்) கலாநிதி துரையப்பா பிரதீபன் (வெற்றி கரமான நபர்களுக்கான வெற்றிச்சூத்திரம்) பல்கலைக்கழக பதிவாளர், ஹிப்பதுல் கரீம் (தற்கால உலகத்திற்கான தலைமைத்துவ உத்திகள்) திறந்த பல்கலைக்கழக முன்னாள் உதவிப் பணிப்பாளர் திருமதி. சரண்யாலவப்பிரதன் (இளைஞர்கள் மற்றம் தொழில் முனை வோருக்கான் வாய்ப்புக்களைத் திறத்தல்) கனவு மெய்ப்படுகிறது. அமைப்பின் தலைவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரெட்ண ராஜா (ஊக்கத்தைக் கட்ட விழ்த்து விடுதல் மற்றும் நேர் மறை சிந்தனைகளை வளர்த்தல்) ஆகியோர் கலந்து கொண்டு குறிப்பிட்ட தலைப்புக்களில் கருத்துரைகள் ஆற்றவுள்ளனர்.
கல்முனை நகர லயன்ஸ் கழகம் மிக நீண்டகாலமாக பல்வேறு மக்கள் நலன் சார்ந்த செயற்திட்டங்ளை முன்னெடுத்துவரும் நிலையில், புதிய தலைவர் லயன், எந்திரி எம்.சுதர்ஸனின் தலைமையில் பல்வேறு முன்மாதிரி செய்திட்டங்களை முன்னெடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)