
posted 17th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கடலில் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்
நடுக்கடலில் விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலம் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பலநாள் மீன்பிடிப் படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் கடலில் விழுந்து உயிரிழந்த மீனவர் ஒருவரின் சடலம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மீன்பிடிக்க சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி. நிமல் கருணாரத்ன என்பவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை அரசினசினர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரணவிசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா மரணவிசாரணையை மேற்கொண்டுள்ளார். பருத்தித்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகைள முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)