
posted 23rd September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஆசிரிய கலாசாலையில் ஆங்கில தினம்
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆங்கில மன்றம் நடத்திய நூற்றாண்டு கால ஆங்கில தின விழா வெள்ளிக்கிழமை (22) காலை 9 மணிக்கு கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் எம். ஜீவராணி புனிதாவும் சிறப்பு விருந்தினராக பலாலி ஆசிரிய கலாசாலையின் ஓய்வுநிலை அதிபர் கவிஞர் சோ. பத்மநாதனும் கௌரவ விருந்தினராக கலாசாலையின் முன்னாள் ஆங்கிலத்துறை விரிவுரையாளர் திருமதி எம்.ஜே.எஸ். முத்துக்குமாரசாமியும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி சு. பரமானந்தம் மற்றும் ஆங்கில துறை விரிவுரையாளர்களான முகுந்தன் பற்றிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்
ஆங்கில தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு மற்றும் ஆசிரிய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)