
posted 19th September 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரிய ஊர்திவழி கையெழுத்து போராட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை (18) வவுனியாவைச் சென்றடைந்தது.
இலங்கை தழிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும், சர்வ ஜன நீதி அமைப்பு இணைந்து முன்னெடுத்துவரும் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் நேற்று (18) வவுனியாவை சென்றடைந்தது.
வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகமான தயாகத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகி, பின்னர் வவுனியா நகரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதி்ராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா கிளையின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY