156 ஆவது போலீஸ் வீரர்கள் தினம்

இலங்கையின் 156 ஆவது போலீஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய சனிக்கிழமை (03) தினம் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் அச்சுவேலி பொலிசாரினால், பொலிசாரை கெரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கடமையில் உள்ள பொலிசார் மற்றும் ஓய்வு பெற்ற பொலிசார் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய உதவி பொலி அத்தியட்சகர் பண்டார அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் கடமையினை சரியாக முன்னெடுத்து குற்றங்களை தடுத்த போலீசாருக்கு பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர், பாடசாலை அதிபர், கிராம சேவையாளர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

156 ஆவது போலீஸ் வீரர்கள் தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)