
posted 4th September 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி – தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்பு எதிர்வரும் திங்கள் முதல் துண்டிக்கப்படும் என வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் அவற்றை செலுத்தி விடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் பணம் 3 ஆயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக செலுத்தவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)