
posted 3rd September 2022
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்குக்கு கீழ் இயங்கி வரும் முன்பள்ளி சிறார்களின் 2022 ஆம் ஆண்டுக்கான சந்தை இன்று சனிக்கிழமை (03.09.2022) பேசாலை நகர் மத்தியில் இடம்பெற்றது.
இப் பகுதியிலுள்ள மூன்று முன்பள்ளி சிறார்கள் சுமார் இருநூறு பேர் ஒன்றினைந்து இச் சந்தையை நடர்த்தினர்.
பேசாலை பங்குத் தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவருமான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஆலோசனைக்கு அமைவாக முன்பள்ளி ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் இச் சந்தை சிறார்களால் இடம்பெற்றது.
இச் சந்தைக்கு பெரும் திரளான மக்கள் வருகை தந்து பொருட்களை வாங்கியதுடன் சிறார்களின் மனதை குளிர்மைப்படுத்திச் சென்றதையும் நோக்கக்கூடியதாக இருந்தது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)