
posted 25th September 2022
திருகோணமலைமூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராம சேவையாளர் பிரிவி்ல இளக்கந்தைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப் பகுதியில் சடலம் இருப்பதை மக்கள் பொலீசாருக்கு அறிவித்த நிலையில் குறித்த சடலத்தை உறவினர் அடையாளம் காட்டுயுள்ளனர்.
திருகோணமலை மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பாட்டாளிபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேந்திரன் செல்வராசா என உறவினரால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பாட்டாளிபுரத்துக்கும் சந்தோசபுரத்துக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியிலேயே வீதியோரத்தில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
இது தொடர்பில் சம்பூர் போலீசார் விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு மேலதிக பிரேத பசிசோதனைகளுக்காக
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY