
posted 24th September 2022
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 149 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாடசாலைச் சமூகத்தினால் நடத்தப்பட்ட மாபெரும் நடைபவனி இன்று (24) இடம்பெற்றது.
இந்நடைபவனியில் பாடசாலை மாணவர்கள்,பழைய மாணவர்கள்,அதிபர்,மற்றும் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான குறித்த நடைபவனியானது பிரதான வீதியூடாக கல்லடி பாலம் வரை சென்று,பின்னர் திருமலை வீதியையடைந்து,மீண்டும் மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக பாடசாலையை வந்தடைந்தது.
இதில் குறித்த கல்லூரி மாணவர்களின் சாதனைகளை வெளிக்கொணரும் வகையில் அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட கிண்ணங்கள் ஊர்திகளில் வலம் வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY