
posted 12th September 2022
வட மாகாணத்தில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பரீட்சை சனிக்கிழமை (10) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.
இந்த பௌத்த கலாச்சார பேரவையினால் முன்னெடுக்கப்படுகின்ற இலவச இரண்டாம் மொழி சிங்கள சான்றிதழ் கற்கை நெறியில் 120 மணித்தியால கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களே பரீட்சையில் இணைக்கப்பட்டனர்.
குறித்த பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெறவுள்ளதுடன் வடக்கில் உள்ள அரச பாடசாலைகளில் சிங்கள மொழி பாட ஆசிரியராக கற்ப்பித்தல் பயிற்சியிலும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)