
posted 29th September 2022
சமூக பாதுகாப்பு சபையின் குழந்தைகளுக்கான திட்டத்தில் இணைந்த கடந்த வருடம் (2021) ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் ஐந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவு மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களினால் 28.09.2022 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சமூக பாதுகாப்பு சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)