சட்டவிரோத மரக்கடத்தல் - சாரதி தப்பி ஓட்டம் - பொலிஸில் மரக்குற்றிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட போது பூவரசங்குளம் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெள்ளி (23) அதிகாலை கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தம்பனை பகுதியில் இருந்து வவுனியாவிற்கு கப் ரக வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட மரக்குற்றிகளை பம்பைமடு பகுதியில் செல்கையில் பொலிஸார் பின் தொடர்வதை கண்ட வாகன சாரதி பம்பைமடு பகுதியில் வாகனத்தை விட்டு தப்பியோடிய நிலையில் வாகனத்தில் 6 மரகுற்றிகளுடன் பூவரசங்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத மரக்கடத்தல் - சாரதி தப்பி ஓட்டம் - பொலிஸில் மரக்குற்றிகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY