வடக்கில் 63 பேருக்கு  கொரொனா  தொற்று

யாழ். போதனா மருத்துவமனையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை 320 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி, யாழ். போதனா மருத்துவமனையில் 9 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 2 பேர், சாவகச்சேரி ஆதார மருத்துவமனைியில் 2 பேர், நொதேர்ன் தனியார் மருத்துவமனையில் ஒருவர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவர் என யாழ். மாவட்டத்தில் 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 16 பேரும், செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையில் 5 பேரும், வவுனியா பொது மருத்துவமனையில் 2 பேருமாக 23 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.

முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் இருவர், மல்லாவி ஆதார மருத்துவமனையில் 4 பேர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவர் என 7 பேரும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 4 பேரும், மன்னார் பொது மருத்துவமனையில் 3 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

தவிர, காங்கேசன்துறை கடற்படை முகாமில் 9 பேருக்கும், மன்னார் கடற்படை முகாமில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வடக்கில் 63 பேருக்கு  கொரொனா  தொற்று

எஸ் தில்லைநாதன்