யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 34 பேருக்கு  கொரோனா

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.சிறைச்சாலையைச் சேர்ந்த 34 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி 39 பேரிடம் பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோதே மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் 34 பேருக்கு  கொரோனா

எஸ் தில்லைநாதன்