
posted 3rd September 2021
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிசன் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (02) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் வந்திருந்தவர்களில் 16 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலையின் விடுதிகளில் தங்கிருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்